
1. என் நதியின் ஓட்டங்கள்
அன்புத் தம்பி ஆவலில் ஆகி, பண்பு சொற்களை பார்த்து பகுத்து, தண்புனற் அமுத தமிழில் தந்த, நுண்சுவை நிறை நூலொன்று நுகர்ந்தேன்! முத்தமிழ் மோகத்தில் முயங்கிய மூளைக்கு, நற்தமிழ் நயந்த “நதியின் ஓட்டங்கள்”! எம் தமிழ் எடுத்து தொடுத்த தம்பிக்கு, செந்தமிழாலே செய்தேன் புகழாரம்! தம்பியின் நூலை ஆய்ந்தோம்! பாநயம் கண்டு பாராட்டி மகிழ்ந்தோம்! மரபு இலக்கியங்களை தமிழில் இன்னமும் நிறைத்திட மாணாக்கர்களே வாரீர்!




