கன்னடம் தோன்றியவள் தென்னகம் விரைந்தாள்!
கண்ணனை அரங்கத்தில் கண்குளிர கண்டவள்,
பெண்ணெனை அணைப்பாய்
மன்னாவென சூழ்ந்தாள்! - காவேரி
கேரளம் பிறந்தவள், சேரளம் புகுந்தாள்!
தெங்குநீர் சுவைக்காரி கொங்குசீர் சகிதசாரி!
பாவையவள் விழுந்தாள்,
கோவையில் குற்றாலமாய்! - சிறுவாணி
தென்பொதிகை உதித்தவள்,
தென்றல் குளிரில் முணங்கினாள்!
விண்தாண்டி வந்தவள்
தென்பாண்டியை அணைத்தாள்!
எல்லையில்லா பாசத்தோடு
நெல்லையெல்லாம் பாய்ந்தாள்! - தாமிரபரணி
கருத்துகள்