கண்ணில் தூசு பட்டால்
அண்ணே என துடிப்பாள்! - ஒரு
பெண்ணில் என் கண்பட்டால்
கண்ணிலேயே அடிப்பாள்!
கோவத்தில் முகந்திருப்பி
பேசாதது போல் நடிப்பாள்!
பாவம்போல் முகம்வைத்தால்
பக்கம்வந்து அணைப்பாள்!
அழுதாருமின்றி இருக்கையில்
அன்னையாய் தேற்றுவாள்…
தொழுதொழுகும் நேரத்தில்
அண்ணனுக்காய் வேண்டிடுவாள்…
மறுவீடு செல்லுகையில் என் மனத்தில் ஒருபங்கு மரிக்கும்!
இதுவரை சரியாக கண்டுகொள்ளப்படாத அவள் முகம்…
வந்து வந்து “அண்ணே” என அழைக்கும்…
தங்கை! என் உதிரம் கொண்ட தங்கமங்கை…
கருத்துகள்