தென்காசியில் ஒரு மாலை பொழுது…
வழக்கம்போல சாரல் காற்று தூரலிட்டுக்கொண்டிருந்தது…
அலுவலக பையோடு நெல்லை மார்க்கமாக செல்லும்
பேருந்துகள் நிற்கும் இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன்…
ஏனென்று தெரியவில்லை…

நான் இடதுபக்கம் பாரத்துக்கொண்டே நகர்ந்துகொண்டிருந்தேன்… 🤫
திடீரென்று ஒரு கைத்தட்டும் சத்தம்…
திரும்பி பார்த்தால் ஓர் ஆணுருவில் பெண்மை சிரித்துக்கொண்டிருந்தது…

“என்னல… பொண்ணுவள சைட் அடிச்சுட்டே வாரியோ…” என
நக்கலாய் கேட்க, “ஆமாக்கா… நான் தான் பாக்கேன்…
என்ன ஒரு பொண்ணுவளும் பாக்க மாட்டுக்கு…” என
நானும் சிரித்து கூறினேன்.
“பாக்காது… ஒன்ன என்ன தவற ஒரு பொண்ணுவளும் பாக்காது…” என
சிரித்து கூறியபடியே அந்த கைத்தட்டல் சத்தம் மற்றொருவரிடம் நகர்ந்தது…
சிரிப்பதா… பரிதவிப்பதா…
குழப்பத்தில் அரி…